உள்துறை அமைச்சர்கள் மாநாட்டின் 2ம் நாள் – சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி உரை!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களும் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து பேசியுள்ளார்.
உள்துறை அமைச்சர் மாநாடு
ஹரியானா மாநிலம் சூரத்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர்கள் மட்டுமல்லாது மாநில அரசு நிர்வாகிகள், செயலாளர்கள் துணைநிலை ஆளுநர்கள், மத்திய காவல் துறை போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி முகாமில் முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கையாழுவது, காவல்துறையை நவீனமாக்குவது, பெண்கள் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
சத்தம் இல்லாமல் இமாலய சாதனை படைத்த இன்ஸ்டாகிராம்.. அனைத்திற்கும் பயனர்கள் தான் காரணம்!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்று தெரிவித்தார். மேலும் நம் தேசத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். அத்துடன் மாநில அரசுகள் அண்டை மாநிலங்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.