தமிழக ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கல் – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி ஆலைகளில் தூசி மற்றும் கற்களை நீக்கும் விதமாக நவீன கருவி பொருத்தப்பட இருப்பதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மிகவும் பயனடைகின்றனர். இந்த திட்டத்தில் முதலில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னரில் இருந்து 20 கிலோ அரிசியையும் இலவசமாக அரசு வழங்கி வருகிறது.
தமிழறிஞர்களுக்கான 7 சிறப்பு விருதுகள் – ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பம்!
இந்நிலையில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தரமான அரிசி வழங்கப்படுவதை அறிந்து அந்த ஆலையில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
TN Job “FB Group” Join Now
அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமானதாக உள்ளது. இதனால், அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட 21 அரிசி ஆலைகளில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று ரேஷன் அரிசியில் உள்ள தூசிகளை அகற்ற கருவிகளை பொருத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசி ஆலைகளும் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.