விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர் 8’ டைட்டில் வின்னராக 10 லட்சத்தை தட்டிச் சென்ற ஸ்ரீதர் சேனா – டாப் 3 யார்?
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மக்களாலும், நடுவர்களாலும் ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ஸ்ரீதர் சேனாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் 8:
விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகின்ற நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர், சீனியர் என்று இருவேறு பிரிவுகளாக இந்நிகழ்ச்சி நடத்தப்படும். தற்போது 7 சீசன்களை கடந்து சீசன் 8 தொடங்கி கடந்த 8 மாத காலமாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர்க்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இதன் ஆரம்பத்தில் 20 கண்டெஸ்டண்ட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு எபிசோடிலும் எலிமினேஷன் வைத்து ஸ்ரீதர் சேனா, முத்து சிற்ப்பி, அனு ஆனந்த், அபிலாஷ், பரத், மானசி ஆகியோர் மட்டுமே பைனல்க்கு கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டனர்.
சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகள் – நீதிமன்றத்தை நாடிய நடிகை!
இதில் முத்து சிற்ப்பி முதல் டைரக்ட் பைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யபட்டவர். கடந்த வாரம் பைனல் வோட்டிங்காக ஹாட்ஸ்டார் ஆப்பில் மக்களுக்கான வோட்டிங் லைன் திறக்கப்பட்டு நேற்றோடு முடிவடைந்தது. இவ்வாறாக நேற்றைய தினம் மாலை 3 மணிக்கு பிரம்மாண்டமாக சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே தொடங்கப்பட்டு இரண்டு சுற்றுகள் நடைபெற்றது. இந்த இரண்டு சுற்றுகளிலும் சிறப்பாக பாடி மக்கள் மனதில் இடம்பிடித்த ஸ்ரீதர் சேனா 33 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து சூப்பர் சிங்கர் 8ன் டைட்டிலை தட்டி சென்று இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றார்.
கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி? விடாமல் மிரட்டும் வெண்பா!!
அது மட்டுமட்டாமல் விஜய் டிவியால் 10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரத் இரண்டாம் இடத்தை பிடித்து 3 லட்சம் பரிசுத் தொகையையும், மூன்றாம் இடம் பிடித்து அபிலாஷ் 2 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றனர். பின்னர் நாடக கலையை கெளரவிக்கும் விதமாக முத்து சிற்ப்பிக்கு ஆறுதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.