தமிழக காவல் நிலையங்களில் சூப்பர் நடவடிக்கை – டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி!
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் நிலையங்களில் நடைபெறும் காட்சிகளை கண்காணிப்பதற்காக கேமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
சூப்பர் நடவடிக்கை:
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் பல முக்கிய அரசு அதிகாரிகள் இடம் மாறுதல் பெற்று பணி நியமனம் செய்யப்பட்டனர். அதில், முக்கியமாக தமிழகத்தில் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் பதவியில் சைலேந்திர பாபு அவர்கள் நியமிக்கப்பட்டார். மிகவும் நேர்மையாகவும், அரசு மற்றும் மக்களுக்கு இடையில் மிகவும் திறமையாக பணியாற்றக்கூடிய இவரை சமூக வலைத்தளங்களில் பலரும் பின்பற்றுகிறர்கள். மக்களுக்கு பல விழிப்புணர்வு செய்திகளை வீடியோ மூலமாக தெரிவித்து வருகிறார்.
மேலும், காவல்துறையில் முன்னதாக நடந்து வந்த முறைகேடுகள் மற்றும் மக்களுக்கு காவல் துறையின் மீது இருந்து வந்த புகார்கள் அனைத்தையும் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், காவல்நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று முன்னதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் நாளை (செப். 17) வெளியீடு – வெளியான தகவல்!
Exams Daily Mobile App Download
அப்போது, தமிழகத்தில் ஒரே ஒரு காவல் நிலையத்தை தவிர மற்ற அனைத்து காவல் நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டது. மேலும், தற்போது தமிழகத்தில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் கவுன்சிலிங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளிடம் தற்கொலை எண்ணம் இருப்பதை அறிந்தால் அங்கு கூட்டி சென்று அவர்களை சமநிலைப்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்