SSC தேர்வு எழுதுவோருக்கான சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசின் ஏற்பாடு!
இந்தியாவில் மத்திய அரசின் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு பி’ மற்றும் ‘சி’ போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வில் பங்கேற்க உள்ள தமிழக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாம்:
இந்தியாவில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) தகுதி வாய்ந்த பணியாளர்களை பி’ மற்றும் ‘சி’ போட்டித்தேர்வுகள் மூலம் நியமித்து வருகிறது. 2022ம் ஆண்டு ‘பி’ மற்றும் ‘சி’ தேர்வின் கீழ் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதில் B பிரிவு தேர்வுக்கு 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பட்ட படிப்பு கல்வி தகுதி கொண்ட இளைஞர்கள் CGLE தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் உதவி பிரிவு அலுவலர், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அரசின் அனைத்துத் துறைகளுக்கும் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல் – அமைச்சர் பேட்டி!!
அதனை தொடர்ந்து C பிரிவு பணிகளுக்கு 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு CHSL போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்கள் மத்திய அரசின் துறைகளில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ‘பி’ மற்றும் ‘சி’ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க வைத்து அவர்களை தேர்ச்சி பெற வைக்கும் நோக்கில் நாளை (அக்.09) சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து SSC பி & சி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பானது சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் நேரில் வரலாம். மேலும் இனையதளத்திலும், அரசின் கேபிள் டிவி, சமூக வலைத்தளங்களிலும் வகுப்பு ஒளிபரப்பு செய்யப்படும் பார்த்து பயன் பெறலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்