தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல் – அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும், புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றும் போதைப்பொருள் இல்லா பள்ளி வளாகங்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் சிறப்பான முறையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து எங்கு இருந்து வந்தாலும் அதற்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார். இதே போல் பொறியியல் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தங்கும் இடத்திற்கான கட்டணம், கல்வி கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழக அரசே வழங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்