Flipkart நிறுவனத்தின் பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – WFH முறையில் வேலை வாய்ப்பு!

0
Flipkart நிறுவனத்தின் பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு - WFH முறையில் வேலை வாய்ப்பு!
Flipkart நிறுவனத்தின் பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு - WFH முறையில் வேலை வாய்ப்பு!
Flipkart நிறுவனத்தின் பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – WFH முறையில் வேலை வாய்ப்பு!

பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பை பெற துடிக்கும் இளைஞர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்கள் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.

Flipkart வேலைவாய்ப்பு:

ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வேலையில்லாமல் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தகுதியான விண்ணப்பதாரர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Flipkart நிறுவனம் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் புதியவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று ஊழியர்களின் பணி செயல்முறையை மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைக்கு மாறியுள்ளன. இதைத் தொடர்ந்து, ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் புதிய பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லி, கர்நாடகா, பீகார் மற்றும் பிற மாநிலங்களிலும் உள்ள தகுதியானவர்கள் Flipkart நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், ஆட்சேர்ப்பு செயல்முறை மெய்நிகர் முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத சரிவை சந்தித்துள்ள IIT கட்ஆஃப் மதிப்பெண்கள் – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Exams Daily Mobile App Download

நிறுவனத்தின் பணியாளர்களை பற்றி கூறும் போது, பணிக்கு தேவையான திறன்களை கொண்டவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தான் நிறுவனத்தின் முன்னுரிமை என்றும், அவர்களை திருப்தி அடைய செய்யும் வகையில் தான் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வலுவான தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள் நிறுவனத்தில் முன்னேற முடியும் என்று நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது. நிறுவனம் போட்டித்தன்மையுடன் இருக்கவும், சந்தை நிலவரங்களுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கக்கூடிய வகையில் நிறுவனத்தின் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!