சீரியல் நடிகரை மணம் முடிக்கும் சன் டிவி நடிகை – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சின்னத்திரையில் பிரபலங்கள் பல ஒரே சீரியல்களில் நடித்து காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வரிசையில் பல சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்த அபி நவ்யா மற்றும் தீபக் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பதிவை அபி நவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டா பதிவு:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் தீபக் மற்றும் அபி நவ்யா ஜோடி தற்போது காதலித்து வருகின்றனர். செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாபாத்திரங்களிலும் நடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லட்சுமி அம்மா மரணத்திற்கு கண்ணன் தான் காரணம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அதிர்ச்சி!
அதில் தீபக்கும் இவருடன் இணைந்து நடிக்கிறார். அவ்வாறு நடித்து மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்ய உள்ளனர். அதற்காக உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் தன் காதலர் குறித்து பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த ஓராண்டாக தன்னுடைய பெஸ்டாக இருந்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.
ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!
உன்னை எப்போதும் காதலித்து கொண்டே இருக்க வேண்டும், உன்னுடனேயே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உன்னை நன்றாக பார்த்துக்கொள், எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இரு, இன்றைய நாளில் கடந்த ஓராண்டாக நான் இணைந்து பயணிக்க தொடங்கிய நாளை எட்டியுள்ளோம். மகிழ்ச்சியாக உள்ளது. உன்னை காதலிக்கப் பெற்றது என்னுடைய வரம், இதேபோல் என்றென்றும் இருக்க வேண்டும் என தன்னுடைய காதலையும், அன்பையும், இதயப்பூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த பதிவில் தீபக் அவர் பங்கிற்கு தன் காதலை வெளியிப்படுத்தி இருந்தார். ‘இந்த ஓராண்டு பயணம்போல் இன்னும் பல ஆண்டுகள் வர இருக்கிறது, என்றென்றும் உன்னை காதலிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.