தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு வரும் நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன் பின் அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. கடந்த முறை அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை வழங்கி இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதற்கான தேதி வெளியாகி இருக்கிறது. மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13 ஆம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளது. அதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB வெளியிட்ட திடீர் அரசாணை – ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் போராட்டம்!
அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெறும் எனவும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 முதல் மே 31 வரை நடைபெறும் எனவும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் பொதுத்தேர்விற்கு வேகமாக தயாராகி வருகின்றனர்.
Summerla exam. Very good. Teachers and students life is so sad.
.