150 குழந்தைகளுக்கு திடீரென பரவிய காய்ச்சல் – அச்சத்தில் பொதுமக்கள்! சுகாதார இயக்குநர் விளக்கம்!
தமிழகத்தை போலவே புதுவையிலும் கடந்த 1 மாத காலமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காலத்தில் அதிக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது புதுவை மருத்துவமனையில் 150 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தொடர்ச்சியாக தற்போது இன்புளுவென்சா காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் எளிதாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்புளுவென்சா காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்து வருகிறது.
வறட்டு இருமல், அதிக சளி, தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு போன்றவைகள் இந்த காய்ச்சலின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேற்சொன்ன அறிகுறிகள் குழந்தைகளுக்கு தென்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்ற வேண்டுமா? ஈசியான வழி வந்தாச்சு!
Exams Daily Mobile App Download
அங்குள்ள அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் தினமும் 50 முதல் 100 பேர் வரை காய்ச்சல் அறிகுறியுடன் வருகின்றனர். மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பொதுமக்கள் காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. தற்போது மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளது. அத்துடன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்