தமிழகத்தில் அனைவர்க்கும் வீடு திட்டம் மானியம் வழங்கல் – அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலமாக மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வீடு திட்டம்:
தமிழகத்தில் பெரும்பான்மையான வாடகை வீட்டில் வசிப்போருக்கான மிக முக்கிய கனவாக உள்ளது சொந்த வீடு கட்டுவதாகும். இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் அதாவது அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலமாக ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை – நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றம்!!
இந்நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியம் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால் அதனை சரி செய்யவும் இந்த திட்டம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டம் மூலமாக மாநகரம், நகரம், பேரூராட்சி, டவுன் பஞ்சாயத்து என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கு அல்லது புதிய வீடு வாங்குபவர்களுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயன்களை பெற வீட்டுக்கு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ குடும்பத்தலைவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்