நாடு முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – 78% மாணவர்கள் ஆதரவு!!

0
நாடு முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு - 78% மாணவர்கள் ஆதரவு!!
நாடு முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு - 78% மாணவர்கள் ஆதரவு!!
நாடு முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – 78% மாணவர்கள் ஆதரவு!!

கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் 78 சதவீத மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு பின்னர் மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கிய நிலையில், தற்போது வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் சில மாநிலங்களில் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்தும், பாடங்கள் கற்பிப்பது தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கணிப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் – தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!!

அதன்படி 78 சதவீத மாணவர்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கும் வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக புதிய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 22 சதவீத மாணவர்கள் தங்கள் பள்ளி நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதில் ஆர்வமும் பயமும் கொண்டுள்ளனர். இந்த ஆய்வானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 12 மாநிலங்களில் உள்ள 131 பள்ளிகளில் இருந்து 8-18 வயதுக்குட்பட்ட 26,860 மாணவர்களிடம் நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

“பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது 52 சதவிகித மாணவர்கள் மதிய உணவு உட்கொள்வதில் அக்கறை கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பள்ளியில் 41% மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது வசதியாக இல்லை” என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் ஆல்பாஸ்? குழப்பத்தில் ஆசிரியர்கள்!

இந்த ஆய்வில் 12 மாநிலங்களை சேர்ந்த 75 ஆசிரியர்களின் பதில்களும் அடங்கும். கலப்பு கற்றல் (ஆன்லைன் மற்றும் ஆப்லைன்) வடிவத்தில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையில் 69 சதவீத ஆசிரியர்கள் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது வழக்கமான தரத்தின் படி மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது என்று 44 சதவீத ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் 42 சதவீத ஆசிரியர்கள் கொரோனா நெறிமுறையைப் பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!