மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விழா காலங்களில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தல்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் உச்சம் தொட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அறிவித்து மக்கள் கூடுவதை தவிர்த்தது. இந்த ஊரடங்கால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். நாடும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தொற்று படிப்படியாக குறைந்து வந்தது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பிப்பு வாய்ப்பு – ஆட்சியர் உத்தரவு!
இதனால் மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்நேரத்தில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியதால் தடுப்பு பணியாக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்து வருகிறது. மேலும் விழாக்காலங்களில் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மொஹரம், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் வர உள்ளதால் வழிபாட்டுத் தலங்களிலும், கடைகளிலும் மக்கள் அதிகம் கூடுவார்கள். இதனால் தொற்று மேலும் விரைவாக பரவ வாய்ப்பு ஏற்படும். எனவே அரசுகள் அலட்சியம் காட்டாமல் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.