தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பிப்பு வாய்ப்பு – ஆட்சியர் உத்தரவு!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து அதற்காக விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
புதுப்பிக்க வாய்ப்பு:
தற்போது அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் அதற்கான தகுதிகள் குறித்து விவரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ – குழு அமைப்பு!
பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்பு சான்றிதழை புதுப்பிக்க தவறி இருக்கலாம். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் ஊரடங்கு அமலில் இருந்ததாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனது சான்றிதழை புதுப்பிக்க வாய்ப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது அதற்கு அருமையான வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து 2017 ம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பு ஆவணத்தை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறியதாவது, பல்வேறு காரணங்களால் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிப்பை புதுப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். கடந்த மே 28 முதல் ஆகஸ்ட் 27 ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே புதுப்பிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இளைஞர்கள் புதுப்பிப்பதற்கு http://tnvelaivaaippu.gov.in/ என்ற அரசின் இணையதளத்தினை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.