ஆதார் அட்டை தொலைந்தால் என்ன செய்வது?- முக்கிய விவரங்கள்!
நாட்டின் குடிமக்களுக்கு முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் அட்டை தொலைந்து விட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆதார் அட்டை:
இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சமீபத்தில் அதிகாரபூர்வ டிவீட்டர் தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒருவர் மெய்நிகர் ஐடி (விஐடி) எண்ணை அசல் 12 இலக்க ஆதார் எண்ணுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இந்த முறை ‘மாஸ்க் ஆதார்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பல தனிப்பட்ட அடையாள ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Tokyo Olympics Day 10, India Schedule List on August 01 – முழு விபரம் இதோ!
ஒரு நபரின் கைரேகைகள், புகைப்பட அடையாளம் மற்றும் கருவிழி விவரங்களை உள்ளடக்கிய மக்கள்தொகை விவரங்களைத் தவிர, பயோமெட்ரிக் விவரங்களையும் ஆதார் கொண்டுள்ளது. இதனால் ஆதார் எண்ணை முறையாக பாதுகாக்க வேண்டியம் அவசியம் உள்ளது. ஆனால் தவிர்க்கமுடியாமல் எதிர்பார்க்காத விதமாக ஆதார் அட்டை தொலைந்து விட்டால், நமது எந்த அரசு பணிகளும் இனி தடை படாத வகையில் UIDAI ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆதார் அட்டை இல்லையென்றால் ஆதார் கடிதம், இ-ஆதார், எம்ஆதார் மற்றும் ஆதார் பிவிசி கார்டு (ஆதார் பிவிசி கார்டு) ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் எல்லா இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு நபரின் ஆதார் அட்டை தொலைந்துவிட்டால், அவர் தனது ஆதார் அட்டையை https://eaadhaar.uidai.gov.inலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அதை பிளாஸ்டிக்/பிவிசியில் மாற்ற தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது