அரசு வேலைக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை – மாநில அரசு புதிய உத்தரவு!
அரசு பணிகளில் சேர இனி OBC/MBC/EWS சான்றிதழ் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு வேலை:
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். பொதுவாக அரசு துறை வேலைகளில் சேர சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இனிமேல் OBC/MBC/EWS சான்றிதழ் இல்லாமலும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அம் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
SBI வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இனி லாபம் தான் – வட்டி விகிதம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Exams Daily Mobile App Download
இது குறித்து வெளியான அறிவிப்பில் அரசு வேலைகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) அல்லது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (இடபிள்யூஎஸ்) ஏதேனும் சாதிச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பித்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு மூலமாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்பு தேர்வுகளின் பல விண்ணப்பதாரர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் கடைசி தேதிக்கு முன்னர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழை வைத்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் கால்நடை உதவியாளர் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு-2021, ஜூனியர் இன்ஜினியர் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு-2022 மற்றும் பட்வார் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு-2021 ஆகிய இடங்களுக்கான தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்