ஆசிரியர்களுக்கு மீண்டும் ரூ.32,000 வரை சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதில் இருந்து படிப்படியாக பல மாநில அரசுகளும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பதவராஜ் பொம்மை அவர்களின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் பணிபுரியும் விருந்தினர் விரிவுரையாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆய்வு நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தற்போது அந்த குழு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13,000, UGC நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.11,000 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அம்மாநில அரசு விருந்தினர் விரிவுரையாளர்கள் சம்பளத்தை குறைந்தபட்சம் மாதம் ரூ.26,000 லிருந்து அதிகபட்சமாக ரூ.32,000 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்கள் மற்றும் UGC நிர்ணயித்த தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.32,000 வழங்கப்படும்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? கொரோனா பரவல் எதிரொலி! உண்மை நிலவரம் என்ன?
அதேபோல் UGC நிர்ணயித்த தகுதிகளுடன் 5 ஆண்டுகளுக்கும் குறைவான விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணிபுரியும், UGC நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.28,000 வழங்கப்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறைவாக விருந்தினர் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ள UGC நிர்ணயித்த தகுதி இல்லாதவர்கள் மாதம் ரூ.26,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்