செப்.13 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
செப்.13 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.13 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.13 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கோவா மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக கோவா மாநிலத்தில் மே மாதம் 9 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் அவ்வப்போது குறைந்து வந்த கொரோனா தாக்கத்துக்கை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுத்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அறிவிப்பு – பிளஸ் 1 மாணவருக்கு கொரோனா!

அதன் படி இந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும். எனினும் ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கோவாவில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை பொருத்தளவு,

Bank holidays – அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! முழு விபரம் இதோ!

  • கேசினோக்கள், ஆடிட்டோரியங்கள், சமூக அரங்குகள், நீர் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • நீர்நிலைகளில் பயணம் செய்வதற்கு அனுமதி இல்லை.
  • ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
    50% திறனுடன் சினிமா அரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
  • சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஒரு அரங்கத்தில் 50% திறனுடன் நடத்தப்படலாம்.
  • பார்கள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 50% திறனில் செயல்படும்.
    உட்புற ஜிம்கள் 50% திறனில் திறக்கப்பட்டிருக்கும்.
  • பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு வளாகங்கள் திறந்திருக்கும்.
  • இதற்கிடையில், கோவாவில் நேற்று (செப்டம்பர் 5) ஒரு நாளில் 72 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 2
    இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!