தமிழக அரசுப் பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அறிவிப்பு – பிளஸ் 1 மாணவருக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கு விடுமுறை:
கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் வழிக்கல்வியில் மாணவர்களுக்கு பெரிதளவில் நாட்டம் இல்லை. இதனால் படிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே விரைந்து பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரப்பட்டது.
செப்.27ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
மறுபுறம் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த காரணத்தால் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் செப்.1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசுப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
செப்.14 வரை பள்ளிகளை மூட உத்தரவு, ஆன்லைனில் தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இதனையடுத்து அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாணவனின் அம்மாவிற்கு கொரோனா உறுதியானதால் செப்.2ம் தேதி மாணவன் பள்ளிக்கு செல்லவில்லை. இருப்பினும் அப்பள்ளியை சேர்ந்த 27 மாணவர்களுக்கும், 42 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களில் அடுத்தடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விரைவில் பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளது.