காவலர்கள் பணி நேரத்தில் கைபேசி பயன்படுத்த தடை – மாநில அரசு அதிரடி!!
பீஹார் மாநிலத்தில் காவல்துறையினர் தங்களது பணி நேரத்தில் கைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவு:
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பாதிப்புகளை உண்டாகியுள்ளது. நோய் தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறைபடுத்துவதில் காவல் துறையினர் அயராது உழைக்கின்றனர். இந்த பணிகளில் ஒரு சில காவல்துறையினர் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், பீஹார் மாநிலத்தில் காவல்துறையினர் பனியின் போது செல்லிடப்பேசியை பயன்படுத்துவதாகவும், தொடர்ந்து சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் பணியின் போது கைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்தே பணி – மத்திய அரசு உத்தரவு!
அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. காவலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் அவர்களின் மீதான மரியாதையும், பணித்திறனும் குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.