பாலூட்டும் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்தே பணி – மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் பாலூட்டும் தாய்மார்கள் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் அலுவலகம் வராமல் வீட்டிலிருந்தே பணி செய்யயாற்ற ஊக்கப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வீட்டிலிருந்தே பணி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஏராளமான மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொற்று பரவல் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து, உயிரிழப்புகளும் உயர்ந்து காணப்படுகிறது. அரசு நோய் தடுப்பு நடவடிக்கைளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. எனவே மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்த நோய் தொற்றிற்கு வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்கும் வகையில் அரசு மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. ஊரடங்கால் அலுவலக பணிகளை வீட்டிலிருந்தே செய்ய நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. குழந்தை பெற்றவர்கள் பாலூட்டும் நிலையில் இருப்பர். அவர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய நிறுவனங்கள் அனுமதியளிக்க வேண்டும்.
கொரோனா 2வது அலையில் 594 மருத்துவர்கள் பலி – அதிர்ச்சி அறிக்கை!
பாலூட்டும் தாய்மார்களின் உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும். அவர்களை நோய் தொற்றிலிருந்து காப்பது அவசியமாகும். இவர்கள் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு வரை வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். அவர்களையும், குழந்தைகளையும் தொற்று நோயில் இருந்து பாதுகாக்க உதவும். அவர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்கப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.