கொரோனா 2வது அலையில் 594 மருத்துவர்கள் பலி – அதிர்ச்சி அறிக்கை!

0
கொரோனா 2வது அலையில் 594 மருத்துவர்கள் பலி - அதிர்ச்சி அறிக்கை!
கொரோனா 2வது அலையில் 594 மருத்துவர்கள் பலி - அதிர்ச்சி அறிக்கை!
கொரோனா 2வது அலையில் 594 மருத்துவர்கள் பலி – அதிர்ச்சி அறிக்கை!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நாட்டில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் உயிரிழப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிக அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸின் முதல் அலையை விட பாதிப்புகள் நடப்பு ஆண்டில் இரட்டிப்பு மடங்காக உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக நமது மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற பல முன்களப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களில் பலர் தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா தொற்றின் முதல் அலையில் நமது நாட்டில் மொத்தமாக 736 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்திருந்தது. தற்போது இரண்டாம் அலையின் தாக்கத்தினால் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் வாரியாக உயிரிழந்துள்ள மருத்துவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளில் ஏற்படும் சிக்கல் – முதல்வர் விளக்கம்!!

அதன்படி, தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்களும், அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பீகாரில் 96 மருத்துவர்களும், உத்திர பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் கொரோனா இரண்டாம் அலையினால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!