தமிழக முதல்வராக முக ஸ்டாலினின் ஒரு மாத பயணம் – உருக்கமான பதிவு!

0
தமிழக முதல்வராக முக ஸ்டாலினின் ஒரு மாத பயணம் - உருக்கமான பதிவு!
தமிழக முதல்வராக முக ஸ்டாலினின் ஒரு மாத பயணம் - உருக்கமான பதிவு!
தமிழக முதல்வராக முக ஸ்டாலினின் ஒரு மாத பயணம் – உருக்கமான பதிவு!

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட முக ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பணியாற்றிய ஒரு மாத கால நிகழ்வுகளை தமிழக மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

முதல்வரின் அறிக்கை:

தமிழக முதல்வராக பதவியேற்று ஒரு மாத காலம் ஆன நிலையில், தமிழ்நாட்டு மக்களுடன் தனது நிகழ்வுகளை முக ஸ்டாலின் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘முத்தமிழ் கலைஞரின் ஓய்விடத்தில் எடுத்துக்கொண்ட சபதத்தின் படி, மக்களின் பேராதரவாலும், உடன்பிறப்புகளின் கடும் உழைப்பாலும் மே 2 ஆம் தேதி மாபெரும் வெற்றி கிட்டியது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது, ‘இவருக்கு வாக்களித்தது மகிழ்ச்சி’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆட்சி அமையும் என உத்திரவாதம் அளித்தேன்.

அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு – தமிழக அரசு ஆணை வெளியீடு!!

தொடர்ந்து மே 7 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், அமைச்சரவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனா சங்கிலியை உடைக்க மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகம் 10 ஆண்டுகளுக்கு பிறகு இருளில் இருந்து தற்போது வெளிச்சத்தை கண்டதாக ஊடகங்கள் உண்மையை உரைக்கின்றன. கட்சி எல்லைகளை கடந்து பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. மக்களும் தங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை என நிம்மதியடைந்துள்ளனர்.

கொரோனா அதிகமுள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேன். கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் என்ற முறையில் தனியாக அல்ல, அரசு அதிகாரிகளின் ஆலோசனையுடன் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி – தஞ்சை மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளும், மேட்டூர் அணையினை திறந்து டெல்டா உழவர்களின் விவசாயத்துக்கு உதவியாகவும், காவிரி நீரை குறுவை சாகுபடிக்கு வழங்கவும் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். மேலும் நாளை (ஜூன் 11) திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பானது பாதியாக குறைந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

என்னை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்திய அன்பு உடன்பிறப்புகளை காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது. நான் எனது கடமையை நிறைவேற்ற இருப்பதால், நீங்கள் கட்டுப்பாடு என்ற கண்ணியத்தை காக்க கூறுகிறேன். இந்த காலம் விரைவில் மாறும். தமிழகத்தை நோய் தொற்று இல்லாத மாநிலமாக மாற்றி விரைவில் உங்கள் அன்பு முகம் காண வருவேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!