தமிழகத்தில் நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – வார இறுதி விடுமுறை எதிரொலி!
தமிழகத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் தமிழகத்தில் முக்கிய பகுதிகளுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தொடர் விடுமுறை நாட்கள் பண்டிகைகள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களின் போது மக்கள் அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் பேருந்து, ரயில்கள் போன்ற அனைத்திலும் அதிக கூட்டல் நெரிசல் இருக்கும். இதன் காரணமாக தமிழக போக்குவரத்து துறை இவ்வாறான விடுமுறை நாட்களில் கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 9ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, மேலும் சுப முகூர்த்த நாளை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கும் சென்னையிலிருந்து மக்கள் பயணிப்பார்கள்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சிலிண்டர் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
மேலும் பிற முக்கிய இடங்களிலிருந்தும் மக்கள் அதிகம் பயணிக்க உள்ளதால் வெள்ளிக்கிழமை எட்டாம் தேதி முதல் வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி ,திருச்சி, சேலம் போன்ற பிற இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் இவ்விடுமுறை நாட்களில் 9,299 பேர் பயண டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.