ஈரோட்டில் முதல்வர் வருகையையொட்டி சிறப்பு ஏற்பாடு – 2 நாட்களுக்கு “இது” தடை!
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வரின் பாதுகாப்பு கருதி டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை:
தமிழகத்தில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழகத்தில் முட்டை விலை குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!
அதன் அடிப்படையில் ரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். எனவே முதல்வரின் வருகையின் காரணமாக இன்றும், நாளையும் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பறக்க விட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.