ரயில் பயணம் செய்ய போறிங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க.. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!

0
ரயில் பயணம் செய்ய போறிங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க.. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!
ரயில் பயணம் செய்ய போறிங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க.. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!
ரயில் பயணம் செய்ய போறிங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க.. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரயில் புறப்படும் மற்றும் வந்தடையும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சில ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் மாற்றம்:

இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ரயில் பயணிகளும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் மக்களின் தேவை கருதியும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்தும் மீண்டும் ரயில்கள் படிப்படியாக இயங்க தொடங்கியது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே நாளை இயக்கப்படும் ரயில்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது நாளை ரயில்களில் பராமரிப்பு பணிகளின் காரணமாக தாம்பரம்-நாகர்கோவில் இடையேயான ரயில் இரவு 11 மணிக்கு புறப்படும். மேலும் அந்தியோதயா விரைவு ரயில் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வழியாக நாகர்கோவில் – தாம்பரம் இடையேயான ரயில் மதியம் 3.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும்.. அடுத்த கட்டத்தை எட்டிய ஊழியர்களின் போராட்டம்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து செங்கோட்டை – மதுரை இடையேயான ரயில் காலை 7 மணிக்கு புறப்படும். விரைவு ரயிலானது நாளை விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் விருதுநகரில் இருந்து மாலை 6.10க்கு மீண்டும் இயக்கப்படும். மேலும் நாகர்கோவில் – கோவை இடையிலான ரயில் காலை 7.35 மணிக்கு புறப்படும். விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்படும். மாற்று வழியில் கோவை – நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!