தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும்.. அடுத்த கட்டத்தை எட்டிய ஊழியர்களின் போராட்டம்!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும்.. அடுத்த கட்டத்தை எட்டிய ஊழியர்களின் போராட்டம்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும்.. அடுத்த கட்டத்தை எட்டிய ஊழியர்களின் போராட்டம்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வேண்டும்.. அடுத்த கட்டத்தை எட்டிய ஊழியர்களின் போராட்டம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல நாட்களாக அரசிடம் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் ஊழியர்கள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் அகவிலைப்படி உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வகையான வாக்குறுதிகளை தற்போதைய அரசு தேர்தலின் போது அளித்தது. அதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% சதவீதமாக உயர்த்தப்பட்டது. பிறகு மேலும் 3% உயர்த்தப்பட்டு 34% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இது குறித்து பரிசீலனை செய்ய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய்ந்தது. இந்த அறிக்கை அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றாதது ஏன்? என்று CPS ஒழிப்பு இயக்கத்தினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூன்லைட்டிங் பஞ்சாயத்துக்கு நடுவே சத்தமே இல்லாமல் TCS நிறுவனம் செய்த வேலை – நிறுவனத்தின் புதிய திட்டம்!

Exams Daily Mobile App Download

தற்போது ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் தமிழகம் மட்டும் ஏன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி பல போராட்டங்களை ஊழியர்கள் நடத்தியுள்ளனர். அதன் அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நடை பயணம் நடத்த அந்த இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!