காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு, வீரர் உயிரிழப்பு – ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் பதற்றம்!
ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்து வரும் வேலையில் அவர்களை தடுக்க காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஒரு வீரர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பதற்றம்:
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள தாலீபான்கள் ஏற்படுத்தி வரும் அச்சத்தினால் அந்நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் என பலரும் அங்கிருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர். தவிர இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் தங்கள் நாடுகளை சேர்ந்த மக்களை மீட்டு வருகிறது. தற்போது வரை காபூல் நகரிலுள்ள விமான நிலையம் மட்டுமே அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
கொரோனாவை ஓரங்கட்டிய வலிமை & மாஸ்டர் – ட்விட்டர் டாப் 10 ட்ரெண்டிங்ஸ்!
அதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்செல்ல நினைக்கும் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்த மீட்டெடுப்பிலும், பலர் கூட்ட நெரிசலுக்குள் சிக்கியும், விமானத்தில் இருந்து விழுந்தும் பலியாகியுள்ளனர். இதற்கிடையே ஆப்கானின் சாலை வழிகளை ஆக்கிரமித்துள்ள தாலீபான்கள் காபூல் செல்லும் மக்களை அங்கு செல்லவிடாமல் தடுத்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 19 ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
தாலீபான்களின் இந்த செய்கைகளை குறித்து, கனடா நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 23) காபூல் விமான நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற மக்கள் கூட்டத்தை கலைக்க தாலீபான்கள் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது அங்கிருந்து ஓடுகையில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இது தவிர துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு வீரரும் பலியாகியுள்ளார். மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.