மத்திய அரசில் 72 உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
SJVN நீர் மின் உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver and Office Boy போன்ற பணிகளுக்கு என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
SJVN Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver and Office Boy பணிகளுக்கு கீழ்கண்டவாறு 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / Graduate போன்ற பணிக்கு தகுந்த ஏதேனும் ஒன்று படித்திருப்பது அவசியம்.
- Cook பணிக்கு NCVT சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் ஆகும்.
- Driver பணிக்கு LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
- மேற்கண்ட பணிக்கு பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் தகவல் அறிந்து கொள்ள அறிவிப்பில் பார்க்கவும்.
- 27.02.2022 அன்றைய தேதியில் பதிவுதாரர் 38 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Office Boy பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.32,000/- மற்றும் Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.38,000/- மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து Computer Based Test, Typing Test, DV , Written Test, Trade Test போன்ற பணிக்கு தொடர்புடைய தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- SC / ST / PWD போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது ஆனால் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
SJVN Limited விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.02.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை செய்து பயனடையவும்.