IPL 2022 : அதிக விலைக்கு ஷ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது 2022ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நடைபெற்று வரும் நிலையில், இதில் அதிகபட்சமாக சுமார் ரூ.12.25 கோடி கொடுத்து ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி எடுத்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த 15வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்கான ஏலம் இன்று (பிப்.12) நடைபெற்று வருகிறது. இதுவரை 8 அணிகளுடன் நடைபெற்று வந்த IPL போட்டிகளில், இம்முறை 10 அணிகள் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே உள்ள 8 நட்சத்திர அணிகளுடன் லக்னோ, குஜராத் என்ற 2 புதிய அணிகள் IPL போட்டிகளில் களமிறங்க இருக்கிறது. இப்போது 15வது IPL போட்டிக்காக நடைபெற்ற வரும் ஏலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – மெகா முகாம் மாற்றம்!
இதில் இந்தியாவின் இளம் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர், அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். அந்த வகையில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் கொல்கத்தா அணிக்கு சொந்தமாகி இருக்கும் ஷ்ரேயாஸ், இதன் மூலம் நடப்பு ஏலத்தில் ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் போன வீரராக மாறி இருக்கிறார். இதுவரை 87 IPL போட்டிகளில் விளையாடியுள்ள நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சுமார் 2375 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் கவனத்திற்கு – போலீசார் எச்சரிக்கை!
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரமான இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் டெல்லி அணியில் விளையாடி வந்த ஷ்ரேயாஸ் இப்போது 2022ம் ஆண்டிற்கான IPL போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். இவரை தொடர்ந்து பந்து வீச்சாளர் அஷ்வின் – ராஜஸ்தான், ட்ரெண்ட் போல்ட் – ராஜஸ்தான், கம்மின்ஸ் – கொல்கத்தா, டி காக் – லக்னோ, தவான் – பஞ்சாப், பாஃப் பிலிஸிஸ் – பெங்களூரு, ரபடா – பஞ்சாப், மொஹமத் ஷமி – குஜராத் மற்றும் வார்னர் – டெல்லி அணிக்கு ஏலம் போயுள்ளனர்.