ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பற்றாக்குறை – பொருட்கள் வழங்குவதில் தாமதம்!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் கிராமப்புற ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் உணவு பொருட்கள் விநியோகத்தில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பற்றாக்குறை :
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கரணமாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு மாவட்டம் தோறும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகைகளையும், நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி தொகையாக ரூபாய் 4000 இரு தவணைகளாக வழங்க உத்தரவிட்டார். மேலும் விலையில்லா சிறப்பு நிவாரண பொருட்களாக 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளார்.
சென்னை பல்கலையில் M.Phil., படிப்பு ரத்து – பதிவாளர் அறிவிப்பு!
இவை அனைத்தும் ரேஷன் கடைகளில் உள்ள ஊழியர்கள் மூலம் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு டோக்கனில் உள்ள தேதி படி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் விடுபட்டவர்களுக்கு இந்த மாதம் சேர்த்து பொருட்கள் வழங்கபடுகிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை வெகு நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது என புகார் எழுந்து வருகிறது. இந்த புகார்களுக்கு விற்பனையாளர்கள் பற்றாக்குறையே காரணம் என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் 14 வகை கொரோனா நிவாரண பொருட்கள், நிவாரணத்தொகை , மத்திய அரசின் சிறப்பு அரிசி தொகுப்பு, வழக்கமான மாதாந்திர பொருட்கள் என தொடர் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் இயங்கும் ரேஷன்கடைகளில் எடையாளர்கள் இல்லை. விற்பனையாளர்கள் மட்டும் உள்ளனர். 30 சதவீத்திற்கும் மேற்பட்ட கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் இரண்டு மூன்று கடைகளுக்கு பொறுப்பாளராக உள்ளனர். இதனால் பொருட்கள் வழங்கலில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே காலிப்பணியிடங்களை தமிழக அரசு விரைந்து நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.