சென்னை பல்கலையில் M.Phil., படிப்பு ரத்து – பதிவாளர் அறிவிப்பு!
சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 2021-22 கல்வி ஆண்டு முதல் முழு நேர மற்றும் பகுதி நேர எம்.பில்., படிப்பு நிறுத்தப்படும் என்று பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலை:
இந்தியாவின் மிக பிரபலமான பல்கலையில் ஒன்று தான் சென்னை பல்கலை. இந்த பல்கலை லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் பல்கலைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்கலை பதிவாளர் அவர்கள் அனைத்து பல்கலை துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 64,818 பேருக்கு கொரோனா பாதிப்பு – 1,183 பேர் உயிரிழப்பு!!
அதில் கூறியிருந்ததாவது, சென்னை பல்கலையில் ஜூன் 18ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் இருந்து முழு நேர மற்றும் பகுதி நேர எம்.பில்., படிப்புகள் ரத்து செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை பல்கலை துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும்.
TN Job “FB Group” Join Now
இந்த கல்வி ஆண்டில் இருந்து எந்த ஒரு கல்லூரியும் எம்.பில்., மாணவர் சேர்க்கையை அனுமதிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ கூடாது. மேலும் முந்தைய ஆண்டுகளில் பபடிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்து கொள்ளலாம் என்றும் அதற்கு சென்னை பல்கலை பரிந்துரைத்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவில் படிப்பை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை படி அழகப்பா பல்கலை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலையில் எம்.பில் படிப்பு ரத்து செய்யப்பட்டு வருகிறது.