ஆகஸ்ட் 30 ஆம் தேதி கடையடைப்பு – நகராட்சி மார்க்கெட் பிரச்சனை எதிரொலி!
ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்தியது தொடர்பான பிரச்சனை காரணமாக வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் அறிவிப்பு:
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய்கறி, துணி, இறைச்சி விற்பனை உட்பட 1587 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நான்கு தலைமுறைகளாக கடைகளை வைத்து பலரும் வியாபாரம் செய்து வருகின்றனர். ஊட்டி நகராட்சி சார்பில் இந்த கடைகளுக்கு பல ஆண்டுகளாக குறைந்த அளவிலான வாடகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கடைகளின் வாடகை கட்டணத்தை பல மடங்கு நகராட்சி நிர்வாகம் உயர்த்தியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை – கொரோனா தடுப்பு!
ஆனால் இந்த கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பல ஆண்டாக பழைய கட்டண தொகையை செலுத்தி வந்தன. நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிக்கடி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் புதிய வாடகை கட்டணத்தை செலுத்தக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் செலுத்த முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் மின்வாரியத்திற்கு கட்டணத்தை செலுத்த முடியவில்லை எனக்கூறி நகராட்சி நிர்வாகம் ஒரு வாரத்திற்குள் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என இறுதியாக நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அப்போதும் வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை செலுத்தாத நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 736 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 நாட்களுக்கு மற்ற கடைகளும் திறக்கப்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில், நகராட்சி மார்க்கெட் கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் தற்போது வியாபாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதன் படி மார்க்கெட் கடைகளை திறக்க நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்தில் வியாபாரிகளின் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் பின் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா மற்றும் நீலகிரி மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பரமேஷ்வரன் ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் பிரச்சனை குறித்து தமிழக முதல்வரிடம் அறிவிப்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்பிரச்னை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 நாட்கள் பொறுமையாக இருப்போம் அதன் பின்னர் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றால் வருகிற 30ம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னரும் முடிவு எடுக்கப்படவில்லை என்றால் குடும்பத்துடன் ஊட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.