பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை – கொரோனா தடுப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகிகளிடம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆட்சியர் அறிவிப்பு:
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதன் காரணமாக செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
‘பேருந்துகள் இயங்காது, மதிய உணவு இல்லை’ – புதுச்சேரியில் செப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு!
இந்த கூட்டத்தில் பேசிய அவர் 18 வயது நிரம்பிய மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழை காண்பித்த பின்பு தான் பள்ளி, கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் அனைத்து நுழைவாயில்களில் கை கழுவுவதற்கு தண்ணீர், சோப்பு வைத்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே வளாகத்திற்குள்ளேயே அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் முகக்கவசத்தை உள்ளே நுழைந்த பின்பு, வெளியே செல்லும் வரை அகற்றக்கூடாது என்றும் ஆட்சியர் கூறினார். மேலும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகள் பின்பற்றாத பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.