தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு (DA) நிறுத்தி வைப்பு – ஊழியர்கள் அதிர்ச்சி! வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு இத்தனை மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி உயர்வினை தற்போது செலுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கூட்டுறவு சங்க ஊழியர்களான ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
ரேஷன் கடை ஊழியர்கள்:
தமிழக அரசு அதன் ஊழியர்களுக்கு கொரோனா கால பொருளாதார சிக்கலை சமாளிக்கும் வகையில் கடந்த 2020 ஜனவரி முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்காமல் இருந்தது. அதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள் 17% அகவிலைப்படி பெற்று வந்தனர். சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள மற்ற பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அகவிலைப்படியினை உயர்த்தி அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி முன்னதாக 17% ஆக இருந்த DA தற்போது 1.1.2022 முதல் 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய ஊதிய உயர்வு ஆணை வெளியிட்ட போது 114 சதவீதம் அகவிலைப்படியை 100 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் இணைத்து விட்டு, மீதம் 14 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் போது கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கலாம் என்று எந்த அறிவிப்பும் அதில் இல்லை.
CSK தோனி முதல் RCB விராட் கோஹ்லி வரை – ஐபிஎல் மெகா ஏலத்தில் கேப்டனை தேடும் 5 அணிகள்!
இதனால் அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு பற்றி அரசு அறிவித்துள்ள நிலையிலும், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு பற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு எந்த அறிவிப்பும் அரசு அளிக்கவில்லை. முதல்வர் அரசு ஊழியர்களுக்கு அளித்துள்ள அகவிலைப்படி உயர்வினை கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்றும், ரேஷன் கடை பணியாளர்களின் மோசமான பொருளாதார நிலை மற்றும் அவர்களின் கடின உழைப்பினை மனிதாபிமானத்துடன் அணுகி, அகவிலைப்படி உயர்வினை நிலுவை தொகையுடன் விரைந்து வழங்கிட வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினரும் சேர்ந்து முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.