விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய ஷாரிக் & சினேகன் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் எலிமினேஷன்:
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றி கண்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் களமிறங்கி 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பார்கள். அவர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும். வாரம் மற்ற போட்டியாளர்கள் இணைந்து வீட்டில் இருக்க தகுதி இல்லாத போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டிற்குள் இருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் முதல் வாரத்தில் 14 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அதில் இரண்டு பேர் சென்ற வாரங்களில் வெளியேறி இருக்கின்றனர். 12 பேரில் பலர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என இந்த வாரம் தொடக்கம் முதல் வாக்குபதிவு தொடங்கப்பட்டது. தற்போது வார இறுதி நாள் வந்துள்ளதால், இன்றுடன் வாக்களிக்க அவகாசம் முடிவடைந்துள்ளது. மக்களின் வாக்குகள் அடிப்படையில் யாரு கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சன் டிவியின் “தெய்வமகள் 2” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது வெளியான தகவலின் படி இந்த வாரம் இருவர் வெளியேற வாய்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி கடைசி இரண்டு இடங்களில் ஷாரிக் மற்றும் சினேகன் இருப்பதால் அவர்கள் தான் இந்த வாரம் வெளியேற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.