தமிழகத்தில் தீவிரமாகும் தேர்தல் கெடுபிடிகள் – முக்கிய அறிவுறுத்தல்கள்!

0
தமிழகத்தில் தீவிரமாகும் தேர்தல் கெடுபிடிகள் - முக்கிய அறிவுறுத்தல்கள்!

லோக்சபா தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முக்கிய அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் அறிவுறுத்தல்கள்:

ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பணம் கையாளுவது தொடர்பாக வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு மாதங்களில் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும் அல்லது எடுத்து இருந்தாலும் சந்தேகப்படும்படியாக இருந்தால் அதை பற்றி உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஒரே கணக்கில் இருந்து ஆர்டிஜிஎஸ் முறையில் பல கணக்குகளுக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்தால் அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்.

TNPSC தேர்வுகளில் 100% தேர்ச்சி நிச்சயம்.. இதை பண்ணுங்க – உடனே பாருங்க!

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலும் அல்லது கணக்கில் இருந்து எடுத்தாலோ வருமான வரித்துறையின் நோடல் ஆபிஸருக்கு தகவல் அளிக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்கு கொண்டு செல்லப்படும் வாகனங்களில் கொடுத்து அனுப்பும் கடிதத்தில் வங்கிகள் க்யூ ஆர் கோடு பதித்து அனுப்ப வேண்டும். பறக்கும் படை அதிகாரிகள் ஸ்கேன் செய்து அதன் உண்மை தன்மை குறித்து உறுதி செய்து கொள்வார்கள் என்றும் கியூ ஆர் கோடு இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தவிர அரசியல் பிரச்சாரங்களுக்காக போஸ்டர், பிளக்ஸ் போன்றவற்றை அடிப்பது தொடர்பாக அச்சக உரிமையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்து உள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!