கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சீரியல் நடிகைகள் – வினுஷாவை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகியதற்கு பின் புதிய கண்ணம்மாவாக வினுஷா தற்போது களமிறங்கி இருக்கிறார். இது குறித்து சீரியல் இயக்குனர் பிரவீன் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
பாரதி கண்ணம்மா வினுஷா:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் 600 எபிசோடுகளுக்கு மேல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு வந்த சினிமா வாய்ப்புகள் காரணமாக அவர் சீரியலில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார். 3 ஆண்டுகளாக அவர் சீரியலில் கண்ணம்மாவாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சீரியல் நிறுத்தப்படுமா என பலரிடம் குழப்பம் எழுந்தது.
நடிகை சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆனால் சீரியல் நிர்வாகம் சார்பில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதிய கண்ணம்மாவை தேர்வு செய்ய பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் பூவே பூச்சூடவா ரேஷ்மாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் இப்போது புதிய சீரியலில் நடித்து வருகிறார். மேலும் திருமண வேலைகளில் இருந்ததால் சீரியலில் நடிக்க மறுப்பு தெரிவித்தாராம். பின் ஜீ தமிழ் நக்ஷத்ராவிடம் கேட்கப்பட்டதாம். அவரும் முடியாது என சொல்ல, வினுஷாவை இயக்குனர் அணுகினாராம். ஆனால் சேனல் தரப்பில் அவரை நிராகரித்து வெளி மாநிலத்தில் இருந்து நடிகைகளை கொண்டு வரலாம் என சொன்னார்களாம்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய், ப்ரியங்கா? ரசிகர்கள் ஷாக்!
அதுவும் சரியாக வராமல் இருக்க மீண்டும் வினுஷாவை அழைத்து நடிக்க சொன்னார்களாம். இயக்குனரை நம்பி சேனல் நிர்வாகம் ஒப்புக் கொள்ள, தற்போது தன்னுடைய திறமையால் அவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் பொருந்தி விட்டார். மக்கள் அவரை கண்ணம்மாவாக ஏற்று கொண்டுள்ளனர். மேலும் TRP தொடர்ந்து முன்னிலையில் இருக்க வினுஷாவும் முக்கிய காரணம் ஆகும். ரோஷினியை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறிய ரசிகர்கள் தற்போது இந்த புதிய கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.