நடிகை சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையான நாகசைத்ன்யா மற்றும் சமந்தா ஜோடியின் விவாகரத்து குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள காரணம் குறித்து பார்க்கலாம்.
விவாகரத்து:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் சமந்தா, நடிகர் நாகசைதன்யா இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து இருவரும் தங்களின் குடுத்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் வழக்கம் போல படங்களில் நடித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. ஆனால் இருவரும் இது குறித்து எந்த பதிலும் அளிகாமல் மௌனம் காத்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் விவாகரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் நாங்கள் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் இனி நண்பர்களாக இருக்க போவதாகவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நாகசைதன்யா – சமந்தா விவகாரத்தின் காரணங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் சமந்தா கருக்கலைப்பு செய்ததால் நாகசைதன்யா விவாகரத்து செய்துள்ளார் என்று பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய், ப்ரியங்கா? ரசிகர்கள் ஷாக்!
இந்த நிலையில் நடிகர் நாகசைதன்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நான் நடிக்கும் படங்களில் என்னுடைய கேரக்டர் எனது குடும்பத்தில் கவுரவத்தை பாதித்து விட கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். குடும்பத்தினரை சங்கடப்படுத்தும் ரோலில் நான் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் சமந்தா தற்போது அதிக சர்ச்சைக்குரிய ரோலில் நடித்து வருகிறார். இது தான் விவாகரத்திற்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஆண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பித்தக்கது.