விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய், ப்ரியங்கா? ரசிகர்கள் ஷாக்!
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிக்கான வோட்டிங் ப்ராசஸில் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கும் போட்டியாளர்கள் ப்ரியங்கா மற்றும் அபிநய் ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் எவிக்ஷன்
விஜய் டிவியில் தற்போது 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’ சீசன் 5. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக இம்முறை தாமதமாக துவங்கிய ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. அதாவது இதுவரை நடைபெறாத நிகழ்வாக இந்த சீசனில் திருநங்கை போட்டியாளர் உட்பட சுமார் 18 பேர் போட்டியாளார்களாக கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீசன், போகப்போக போர்க்களமாக மாறியது.
அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் எதற்கெடுத்தாலும் சண்டை என்ற அளவுக்கு இந்த சீசனை போரடிக்க வைத்துவிட்டனர். இதற்கிடையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வர இந்நிகழ்ச்சியில் ஸ்வாரசியத்தை கூட்டும் விதமாக முன்னாள் போட்டியாளர் அபிஷேக், அமீர், சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறக்கப்பட்டனர். தவிர பிக்பாஸ் கொடுக்கும் வித்தியாசமான டாஸ்குகள் மூலம் இந்த சீசன் தற்போது சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது.
முடிவுக்கு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
இப்படி இருக்க இந்த வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நாமினேஷனில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக கடுமையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அபிநய், அக்ஷரா, அமீர், பாவனி, ப்ரியங்கா, ராஜு, சஞ்சீவ், தாமரை செல்வி, வருண் ஆகியோருக்கு வோட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இதில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கிறார். அந்த வகையில் இந்த வாரத்தில் மிக குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் ப்ரியங்கா அல்லது அபிநய் ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.