தமிழகத்தில் நர்சிங் படிப்புகளுக்கு செப்.21 கலந்தாய்வு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்பான நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் இதற்கான கவுன்சிலிங் தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நர்சிங் கலந்தாய்வு:
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த நர்சிங் படிப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்காக தனியாக இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான இடஒதுக்கீடு முறையில் 27,000 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் சேரலாம்.
ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கப்பட்ட மருத்துவப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் முன்னதாக ஆகஸ்ட் 12ம் தேதியோடு வரை மட்டுமே பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் காரணமாக ஆகஸ்ட் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் மீண்டும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதை முன்னிட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் வேலைத்தேடுவோர்களுக்கு மாபெரும் வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் குறிப்பாக, சென்னை மற்றும் கோவையில் அதிகமாக கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதாக கூறினார். இதனால் மக்கள் பொது இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பிறகு, அவர் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்படும் என்று கூறினார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்