தமிழகத்தில் வேலைத்தேடுவோர்களுக்கு மாபெரும் வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.17) திருப்பத்தூர் வாணியம்பாடி நகராட்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பிறகு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் அரசு போட்டித் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டது. இதனையடுத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கடந்த மே மாதம் குரூப் 2,2A தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் அரசுத்துறையை தொடர்ந்து தனியார் துறையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வந்தது. அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது ஒரு மாதத்தின் 2 வது மற்றும் 4வது வாரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 17 (சனிக்கிழமை) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சீன கடன் செயலி விவராகத்தில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை – Patym நிதி முடக்கம்!
Exams Daily Mobile App Download
முகாமானது வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வி தகுதி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ளவுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்