டிச.13 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரி வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் கொரோனா தொற்று பரவலுக்கு முந்தைய காலத்தில் நடைபெற்றதை போல நேரடி முறையில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலை தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? ஆட்சியர் உத்தரவு!
அதனை தொடர்ந்து தேர்வு முறையில் பல்வேறு புதிய மாற்றங்களையும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்வு முறை மற்றும் தேர்வு மதிப்பீடு உள்ளிட்ட முறைகளில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு, இண்டர்னல் தேர்வு, Viva உள்ளிட்ட அனைத்தும் நேரடியாகவே நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்காக தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் டிசம்பர் 13ம் தேதி தொடங்கும் என்றும், விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.