தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கரையோர கிராம வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதனால் மக்கள் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை, காரைக்கால், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இன்னும் சில பகுதிகளில் குடியிருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. அதனால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பாவுக்கு பிறந்த ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!
மேலும் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அதனை தொடந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கரையோர கிராமங்களில் இருக்கும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து வருகிறது. இவ்வாறாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பின் காரணமாக பல்வேறு அரசுப் பள்ளிகள் நிவாரண மையங்களாக செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு நிவாரண மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 93 பள்ளிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பள்ளிகளுக்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அரசு அறிவித்துள்ளது. மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.