பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் – 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்.. அஞ்சல் துறை தகவல்!

0
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் - 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்.. அஞ்சல் துறை தகவல்!
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் - 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்.. அஞ்சல் துறை தகவல்!
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் – 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்.. அஞ்சல் துறை தகவல்!

இந்தியாவின் பெண் குழந்தைகளின் நலனுக்காக செல்வமகள் சேமிப்பு எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் கணக்கு தொடங்கிவுள்ளதாக இந்திய அஞ்சல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சேமிப்பு திட்டம் பெண் குழந்தை வைத்திருப்பவர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் இந்த செல்வமகள் திட்டத்தில் வட்டி விகிதம் அதிகமாக வழங்கப்படுகிறது.

நாளை ( பிப்.15) ம் தேதி தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பவர்கட் – பராமரிப்பு பணிகள் எதிரொலி!

Follow our Instagram for more Latest Updates

அதனால் பலரும் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சுமார் 11 லட்சம் பேர் கணக்கு தொடங்கியுள்ளதாக இந்திய அஞ்சல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் மொத்தமாக 2.8 கோடி பேர் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ரூ. 250 செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 150 முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 7.6 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!