TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் – முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூன் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தற்போது நிர்வாக காரணமாக ஜூலை 2 ஆம் தேதி அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வுக்குரிய விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து TNPSC இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக ஆட்டோமொபைல் பொறியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், உதவி பொறியாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் மாநில அரசின் தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்திற்கு தொழிற்பயிற்சி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த மே 3ம் தேதியுடன் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் இப்பணியிடத்திற்கான தேர்வு ஜூன் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணமாக இத்தேர்வை தள்ளி வைப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு ஜூன் 26 ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 2 ஆம் தேதி அன்று காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.