தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மதிப்பெண்:
தமிழகத்தில் கொரோனா அச்சத்தை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தது. இதையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது குறித்து ஆராய தமிழக அரசு பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு நியமித்து உத்தரவிட்டது. தற்போது அந்த குழுவானது 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கத்தினால் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் – தவறாமல் படிங்க!
இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருடன் நேற்று (ஜூன் 25) முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு மாதிரியை கொண்டு மதிப்பெண் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி பிளஸ் 2 மாணவர்களின் 10, 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக பிளஸ் 2 மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் விவரங்களை தேர்வுத்துறை கோரியிருந்தது. இதன் அடிப்படையில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அதிக அளவில் கணக்கீட்டில் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.