தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
இந்தியா முழுவதும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 14ல் ஆரம்பமாகியது. இதையடுத்து தற்போது தமிழக தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே. ஆர்.நந்தகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு:
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த இரண்டு வருட காலம் நாட்டில் அனைத்தும் தலைகீழாக மாறி பல தடைகள் அமலுக்கு வந்தது. இதில் பாதிக்கப்பட்டதில் ஒன்று கல்வியும் தான். ஏனெனில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு வைரஸ் பரவலின் தாக்கமும் குறைந்து பல தடைகளும் தளர்த்தப்பட்டது. மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆண்டின் இறுதி தேர்வுகளும், 10, 11, 12ம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளும் ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
கடந்த மே 14 அன்று 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவுக்கு வந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும, 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் இம்மாதம் இறுதி நாளான மே 31 வரை நடைபெறும். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு திட்டமிட்ட படி ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதாவது பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர்களில் சிலர் வினாத்தாள் திருத்தும் பணிக்கும், சிலர் வீட்டில் ஓய்வும் பெற்றுக்கொள்வார். அதே வகையில் மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்க தாமதமானால் கற்றல் குறைவு ஏற்படும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே 800 நாட்கள் கொரோனா காரணத்தால் வீட்டில் இருந்து கற்றல் இழப்பை மாணவர்கள் சந்தித்தனர். மீண்டும் அந்த தவறு தொடர கூடாது, அவ்வாறு தொடர்ந்தால் ஏழ்மையில் பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பை நிறுத்தவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகும். எனவே அரசு அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.