அக்டோபர் 3 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
மலேசியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
மலேசியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எளிதாக தொற்று பரவும் என்ற அச்சத்தால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல மலேசியாவிலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருவதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது.
நடிகர் சூரியின் குடும்ப திருமண விழாவில் 10 பவுன் தங்க நகை திருட்டு – விசாரணை தீவிரம்!
அதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மலேசியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதன் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் அறிவித்துள்ளார். வாராந்திர சுழற்சி முறையில் ஒவ்வொரு வகுப்பிலும் 50% மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும். அதனால் மாணவர்கள் தற்போதைய வகுப்பிலேயே தொடர வேண்டும்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மேலும் கொரோனா பரவும் அச்சம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்றால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கலாம். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி விடுமுறை விடப்படும். மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதை ஊக்குவிப்பதே அரசின் நோக்கம் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.