செப் 8ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
டெல்லியில் தற்போது கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்துள்ளதை அடுத்து வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை படிப்படியாக துவங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கடந்த ஏப்ரல் மாதம் முதல் உருவான கொரோனா நோய் தொற்று தாக்கத்தினால் டெல்லி முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா 2ஆம் அலையால் பெருமளவு பாதிக்கப்பட்ட மாநிலங்களில், டெல்லி யூனியன் பிரதேசமும் ஒன்று. கொரோனாவின் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்ட மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு மீண்டுமாக திரும்ப துவங்கியுள்ளனர்.
மின் வாகனங்களாக மாறும் மத்திய, மாநில அரசு வாகனங்கள் – மத்திய அமைச்சர் கடிதம்!
இந்நிலையில் டெல்லி முழுவதும் தற்போதுள்ள கொரோனா தாக்கத்தை ஆய்வு செய்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் டெல்லி முழுவதும் பள்ளிகளை திறப்பது படிப்படியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 9 முதல் 12 வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி அரசு சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக பள்ளிகளை மீண்டுமாக திறந்தது. இருப்பினும் 4 மாதங்களுக்கு பின்னாக வரும் செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.